• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லெபனானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பான அப்டேட்

இலங்கை

லெபனான் நாட்டில் நிலவும் பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு, அந்நாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

லெபனானில் பாதுகாப்பு நிலைமை நிலையற்ற, தொடர்ச்சியான அவசர நிலையில் உள்ளது.

பெய்ரூட்டில் உள்ள இலங்கைத் தூதரகமானது, இலங்கை அமைப்புக்கள் மற்றும் தூதரகத்தில் பதிவுசெய்யப்பட்ட தனிப்பட்ட இலங்கையர்களுடன் தொடர்ந்து தொடர்பைப் பேணி வருகிறது. தூதுவர் கபில ஜயவீர மற்றும் இலங்கை தூதரக அதிகாரிகள், அங்குள்ள இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இவ்வவசர நிலைக்கு முகங்கொடுத்து, தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட தங்குமிடங்களைப் பெற்றுள்ள, சில இலங்கையர்களைத் தவிர, இதுவரை எந்த இலங்கையர்களும் இந்நிலைமையால் பாதிக்கப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 

Leave a Reply