• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுபானசாலை அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து சங்கானையில் போராட்டம்

இலங்கை

சங்கானையில் புதிதாக மதுபான சாலை ஒன்றை அமைப்பதற்கு அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் எனவே மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் என வலியுறுத்தியும் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று யாழ்ப்பாணம் சங்கானை பேரூந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்றது.

போராட்டத்தின் முடிவில் சங்கானை பிரதேச செயலர் கவிதா உதயகுமார் ஊடாக ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

இதில் வடபிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினர், சங்கானை பல்நோக்கு கூட்டுறவு சங்கத்தினர், வலிகாமம் மேற்கு முச்சக்கர வண்டி சங்கத்தினர், தோற்பயிற்சி உற்பத்தி விற்பனை கூட்டுறவு சங்கம், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply