• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான் நடிப்பதை வடிவேலு தடுத்தார்- ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம்

சினிமா

யூடியூப் சேனல்களில் அவதூறாக பேசியதாகக்கூறி நடிகர் சிங்கமுத்துவிடம் ரூ.5 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு வடிவேலு சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

மான நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடிவேலு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதிலளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு இருந்தது.

இந்நிலையில் நடிகர் வடிவேலு தொடர்ந்த வழக்கு தொடர்பாக நடிகர் சிங்கமுத்து பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், நடிகர் வடிவேலுவின் வெற்றியின் பின்னால் நான் தான் இருந்தேன். என்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகர் வடிவேலு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப் பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக வடிவேலு சித்தரித்தார்.

நடிகர் வடிவேலு சொத்து வாங்கியதில் எந்த நிதி இழப்பையும் அவர் எதிர்கொள்ளவில்லை என ஐகோர்ட்டில் சிங்கமுத்து விளக்கம் அளித்துள்ளார்.
 

Leave a Reply