• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அம்பாறையில் அரியநேத்திரனின் பிரசார நடவடிக்கைகள் ஆரம்பம்

இலங்கை

நமக்காக நாம் எனும் தொனிப்பொருளில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரனின் பிரசார நடவடிக்கைகள் அம்பாறை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அம்பாறை மாவட்டத்தில் பிரசாரத்தை முன்னெடுத்த சந்தரப்பத்தில் பல்வேறு பகுதிகளில் பொலிஸார் அவருடன் முரண்பட்டதனை அவதானிக்க முடிந்தது.

பிரச்சாரம், பெரியநீலாவனை முருகன் கோயில் முன்றலில் இருந்து ஆரம்பமானது.
இதனை தொடர்ந்து மற்றுமொரு பிரச்சார நடவடிக்கைக்காக செல்வதற்கு தயாராகி கொண்டிருக்கும் போது அங்கு சென்றிருந்த பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் விசேட அதிரடிப்படையினரின் இடையூறினை விளைவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்முனை ஆர்.கே.எம்.சந்தி, கல்முனை தரவை பிள்ளையார் முன்றல் உள்ளிட்ட காரைதீவு கண்ணகி அம்மன் கோயில் பகுதியிலும் தேர்தல் பிரச்சாரத்தின் போது இவ்வாறு அழுத்தங்கள் தொடர்ந்ததுடன் பாதுகாப்பு தரப்பினரால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply