• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் மாணவர்களை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியை கைது

கனடா

கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தின் போர்ட் ஹோப் பகுதியில் ஆசிரியை ஒருவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் எட்டில் கற்பிக்கும் ஆசிரியை ஒருவரை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் திகதி இந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

40 வயதான கெலி அண்ட் ஜெனிங்ஸ் என்ற ஆசிரியை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சென் அந்தனிஸ் கத்தோலிக்க பாடசாலையில் கற்பித்த ஆசிரியை இவ்வாறு குற்ற செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த பாடசாலையில் கற்ற மாணவர்களை ஆசிரியை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண் ஆசிரியை எதிர்வரும் அக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி நீதிமன்றத்தில் விசாரணைகளுக்காக முன்நிலையாவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் ஒரு முறைப்பாடு செய்யப்பட்டதாகவும் பின்னர் நடத்திய விசாரணைகளின் போது மேலும் மாணவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குறித்த ஆசிரியைக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 16 வயதிற்கும் குறைந்த பாடசாலை மாணவர்கள் இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 

Leave a Reply