• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம்

இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ் பொது வேட்ப்பாளர் பா.அரியநேந்திரனின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் நேற்று முல்லைத்தீவு மண்ணில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் குறித்த  தேர்தல் பரப்புரைக்  கூட்டம் இடம்பெற்றது.

வடமாகாண சபையின் முன்னாள் விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்  நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்லம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், யாழ் மாநகர சiபின் முன்னாள் முதல்வர் மணிவண்ணன், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவர் வேந்தன், உள்ளிட்ட அரசியல்வரிகளும் மற்றும் எழுத்தாளர்களான நிலாந்தன், யதீந்திரா உள்ளிட்டவர்களும் பொதுமக்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
 

Leave a Reply