• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் போலிவாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.-சஜித் பிரேமதாச

இலங்கை

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் போலிவாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்

பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இதனை குறிப்பிட்டுள்ளார்

நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வுகாண ஐக்கிய மக்கள் கூட்டணி தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளதெனவும் ஜனாதிபதி வேட்பாளர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளார்

நாட்டை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் காணப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட அனைத்து உரிமங்களும் தமது ஆட்சியில் ரத்து செய்யப்படும் எனவும் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்
 

Leave a Reply