• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவு கோரி யாழில் துண்டுப்பிரசுரம் விநியோகம்

இலங்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு கோரி யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் விஜயகலாமகேஸ்வரன் தலைமையில் யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் தேர்தல் பிரசாரத்தினை ஆரம்பித்துள்ளனர்.

முன்னாள் ராஜாங்க அமைச்சரும் யாழ் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளருமான விஜயகலா மகேஸ்வரன் தலைமையிலான அணியினர் நயினாதீவு அனலை தீவு பகுதிகளில் மக்களை சந்தித்துகலந்துரையாடியதோடு ஜனாதிபதிக்கு ஆதரவான துண்டு பிரசுரங்களை விநியோகித்தனர் 
 

Leave a Reply