• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேர்தல் கடமைகளுக்காக 50 ,000 பொலிஸார்

இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைகளுக்காக 50,000 பொலிஸ் உத்தியோகத்தர்களை ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குத் தேவையான பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை ஏற்கனவே கணக்கிடப்பட்டு வருவதாக ஜனாதிபதித் தேர்தலுக்குப் பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள எண்ணிக்கை, பொலிஸ் புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்வது தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply