தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய சிவகார்த்திகேயன்
சினிமா
ஜூன் 2 அன்று நடிகர் சிவகார்த்திகேயன் ஆர்த்தி தம்பதிக்கு மூன்றாவதாக ஆண் குழந்தை பிறந்தது.
இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதனா என்ற மகளும் குகன் என்ற மகனும் உள்ள நிலையில் மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என்று சிவகார்த்திகேயன் பெயர் சூட்டியுள்ளார்.
தனது 3வது குழந்தைக்கு பவன் என பெயர் சூட்டிய, அந்நிகழ்வின் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.