• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

இலங்கை

சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர். நீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 20 வயதுடைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் உயிரிழந்த இளைஞன் தனது மனைவி மற்றும் 3 பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply