ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, நாட்டின் பல மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படைகளையும் அழைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது இன்று (27) முதல் நடைமுறைக்கு வரும்.
அதன்படி, பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படை ஆகியவற்றின் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இலங்கைநிதி
இந்த உத்தரவின்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகலை, புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய நிர்வாக மாவட்டங்கள் இதில் அடங்கும்.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை அண்மித்துள்ள உள்ளூர் கடற்பரப்புகளும் இந்த உத்தரவில் அடங்கும்.
ஜனாதிபதி இந்த உத்தரவை ஆகஸ்ட் 25, 2026 அன்று பிறப்பித்தார், இது 27 ஆகஸ்ட் 2026 முதல் நடைமுறைக்கு வரும்.


