TamilsGuide

வண்ணான்கேணி வடக்கில் காணியின்றி தவிப்பு

கிளிநொச்சி  வண்ணான்கேணி வடக்கு கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கென சொந்தமாகக் குடியிருப்பு நிலம் (காணி) இல்லாத காரணத்தினால் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் ஒன்றிணைந்து கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான அவர்களுக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

அக்கடிதத்தில் கிராம மக்கள் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

‘எமது கிராமத்தில் வாழ்ந்து வரும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்குவதற்கு சொந்தக் காணி இல்லாத நிலையில் உறவினர்களின் வீடுகளிலும் மற்றவர்களின் காணிகளிலும் தற்காலிகமாக தங்கி வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்கள் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு அசௌகரியங்களையும் நெருக்கடிகளையும் எதிர்நோக்கி வருகின்றனர்.

இப்படியான சூழ்நிலையில், எமது கிராமத்தின் பின்புறமாக அமைந்துள்ள அரசின் ஒதுக்கீட்டுக் காப்புக் காணிகளை பிரதேச செயலகத்தின் ஊடாக பொதுப் பயன்பாட்டுக்காக (வெகுசமூகத்திற்காக) வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.

எனவே முதற்கட்டமாக காணியற்ற நிலையில் தவித்து வரும் இந்த ஏழை குடும்பங்களுக்கு அக்காணிகளைப் பகிர்ந்தளித்து அவர்களுக்கான போக்குவரத்து வீதி வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.’

தங்களின் இந்த அத்தியாவசியத் தேவையையும், வாழ்வாதாரப் பிரச்சினையையும் கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் மூலம் தமக்கு சாதகமான பதிலை பெற்றுத் தருமாறு வண்ணான்கேணி வடக்கு கிராம மக்கள் மிகத் பணிவுடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

Leave a comment

Comment