TamilsGuide

ஆசிய இளையோர் போட்டியில் இலங்கைக்குப் பெருமை சேர்த்த இளையோர்

22-வது 20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான உயரப்பாய்தல் போட்டியில் தருஷ மெந்திஸ் இன்று (30) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 2.14 மீற்றர் உயரத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், பெண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரன்சினி பெரேரா, மிக நெருக்கமான போட்டி முடிவின் ஊடாக இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

அவர் 24.7 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தார். மேலும், ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சதேவ் ராஜகருணா மற்றும் ஓமெல் சில்வா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 21.13 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்த சதேவ் ராஜகருணா இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார்.

அதே சமயம் ஓமெல் சில்வா நான்காவது இடத்தைப் பெற்றார். இந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி ஹொங்கொங்கில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

22-வது 20 வயதுக்குட்பட்ட ஆசிய இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியில், ஆண்களுக்கான உயரப்பாய்தல் (High Jump) போட்டியில் தருஷ மெண்டிஸ் இன்று (30) வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

அவர் 2.14 மீட்டர் உயரத்தைப் பதிவு செய்துள்ளார். இதற்கிடையில், பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திய ரன்சினி பெரேரா, மிக நெருக்கமான போட்டி முடிவின் ஊடாக இலங்கைக்குத் தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார்.

அவர் 24.7 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்தார். மேலும், ஆண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சதேவ் ராஜகருணா மற்றும் ஓமெல் சில்வா ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் 21.13 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்த சதேவ் ராஜகருணா இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை வென்று கொடுத்தார், அதே சமயம் ஓமெல் சில்வா நான்காவது இடத்தைப் பெற்றார். இந்த மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டி ஹொங்கொங்கில் நடைபெறுகின்றது.
 

Leave a comment

Comment