மீண்டும் இணையும் தலைவன் தலைவி கூட்டணி
சினிமா
'பசங்க', 'வம்சம்', 'மெரினா', 'கடைக்குட்டி சிங்கம்', 'நம்ம வீட்டு பிள்ளை', 'எதற்கும் துணிந்தவன்' உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பாண்டிராஜ், விஜய் சேதுபதியின் 52-வது திரைப்படமான ‘தலைவன் தலைவி’ திரைப்படத்தை இயக்கினார்.
கணவன் மனைவி இடையே உள்ள முரண், அன்பு, சண்டை, கோபம் மற்றும் அனைத்திற்கும் விவாகரத்து தீர்வல்ல என்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இத்திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலையும் குவித்தது. குறிப்பாக குடும்பங்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில், இயக்குநர் பாண்டிராஜ் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பாண்டிராஜ் இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டணியை எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இயக்குநர் பாண்டிராஜ், ‘பரிமளா & கோ’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், ஊர்வசி, சஞ்சனா கிருஷ்ணமூர்ததி, யோகிபாபு, இயக்குநர் மிஷ்கின், சாண்டி, சிங்கம்புலி உள்ளிட்டோர் நடித்துளளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.





















