• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பிரித்தானியாவில் வெப்ப நிலை சாதனை அளவில்

இலங்கை

இந்த மே மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக வெப்பம் தீவிரமடைந்து வருவதால், பிரித்தானியாவின் சில பகுதிகளுக்கு இன்று வெப்ப அலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கென்ட் மாகாணத்தின் ஃபிரிட்டென்டன் நகரில் நேற்றைய (23) தினம் 30.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது – இது இந்த ஆண்டில் இதுவரை பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும். 

இந்த அதிகரித்து வரும் வெப்பநிலையானது வங்கி விடுமுறை நாளான திங்கட்கிழமையன்று, மே மாதத்திற்கான புதிய தேசிய வெப்பநிலை சாதனைகள் படைக்கப்படுவதற்கும் வழிவகுக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையினர் சரியான நேரத்தில் இந்த வெப்பமான வானிலையை வரவேற்றாலும், இந்த வெப்ப அலையின் நீடித்த தன்மை சிலரின் உடல்நலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மிட்லாண்ட்ஸ் மற்றும் கிழக்கு இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு, குறைந்தபட்சம் புதன்கிழமை வரை இரண்டாம் நிலை வெப்ப நிலை தொடர்பான சுகாதார எச்சரிக்கைகள் அமுலில் உள்ளன.
 

Leave a Reply