ஹோர்முஸ் நீரிணையில் அண்மையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர்நிறுத்தம் இன்னும் அமலில் உள்ளதாக அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்தம் முடிவடைந்ததா என்ற கேள்விக்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகள் மற்றும் ‘Project Freedom’ திட்டம் தனித்தனி செயல்முறைகள் என விளக்கினார்.
மேலும், போர்நிறுத்த எல்லைகளை மீறாமல் எச்சரிக்கையுடன் செயல்படுமாறு ஈரானை கேட்டுக்கொண்ட அவர், தற்போதைய நிலை குறித்து அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.


