TamilsGuide

விரைவில் திறைசேரி நிதி மோசடி குறித்து விசேட அறிவிப்பு

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி காணாமல் போன சம்பவம் தொடர்பாக எதிர்வரும் 5ஆம் திகதி நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்தவினால் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்படலாம் என அந்த அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, இச்சம்பவம் தொடர்பாக நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷண சூரியப்பெரும இன்று (30) பிற்பகல் 1 மணிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு (COPF) முன்னிலையில் ஆஜராகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 

Leave a comment

Comment