TamilsGuide

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் பொங்கல் நிகழ்வு

தைப்பொங்கல் விழாவை முன்னிட்டு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண அலுவலகத்தில் இன்று பொங்கல் நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், அலுவலக உத்தியோகத்தர்கள், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment