TamilsGuide

வடமராட்சியில் தமிழரசின் தை பொங்கல்...

இலங்கை தமிழரசு கட்சியின் தை பொங்கல் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் தலைமையில் இன்று காலை வடமராட்சி மடத்தடி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இதில் இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொது செயலாளரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம்.ஏ. சுமந்திரன் பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.

மேலும் இலங்கை தமிழரசு கட்சியின் வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை தவிசாளர் கு.சுரேந்திரன, உப தவிசாளர் தயாபரன், பருத்தித்துறை பிரதேச சபை, பருதுத்துறை நகர சபை, வடராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை உறுப்பினர்கள், இலங்கை தமிழரசு கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
 

Leave a comment

Comment