• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து பெய்ரூட் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

கடந்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இன்று லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. பெய்ரூட்டின் தெற்குப் பகுதியில் கடுமையான வகையில் வான்தாக்குதல் நடத்தியுள்ளது.

துல்லியமான தாக்குதல் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. மேற்கொண்டு எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லா இது தொடர்பாக கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கீழே போடுமாறு இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. லெபனான அரசு, ஹிஸ்புல்லா அமைப்பினரை ஆயுதமில்லா அமைப்பினராக்க ராணுவத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதேவேளையில் ராணுவ திறனை மீண்டும் கட்டமைக்க ஹிஸ்புல்லா முயற்சி செய்து வருவதாக இஸ்ரேல் குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், லெபனான் அரசு அதை மறுத்துள்ளது.
 

Leave a Reply