• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பாகிஸ்தான் தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து விபத்து - 15 தொழிலாளர்கள் பலி

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு பசை தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7 பேர் காயமடைந்தனர்.

லாகூரில் இருந்து 130 கி.மீ தொலைவில் உள்ள பைசலாபாத் மாவட்டத்தில் இன்று காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில் இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

சம்பவம் நடந்த உடனேயே தொழிற்சாலை உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார். அதே நேரத்தில் மேலாளரை உள்ளூர் போலீசார் கைது செய்தனர்.

வெடிப்பின் தீவிரம் காரணமாக அருகிலுள்ள கட்டிடங்களும் சேதமடைந்துள்ளதாக பைசலாபாத் துணை ஆணையர் ராஜா ஜஹாங்கிர் அன்வர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

மீட்புக் குழுக்கள் இதுவரை இடிபாடுகளில் இருந்து 15 உடல்களை மீட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

Leave a Reply