தலைவரின் லட்சியப் படமான பல்லாண்டு வாழ்க
சினிமா
தலைவரின் லட்சியப் படமான "பல்லாண்டு வாழ்க" 1975 அக் 31 ல் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது. உதயம் புரடொக்ஷன்ஸார் தலைவரோடு இணைந்த 3 வது தயாரிப்பான "பல்லாண்டு வாழ்க" முதல் இரண்டு படங்களான "இதயவீணை" "சிரித்து வாழ வேண்டும்" ஆகியவை 100 நாட்கள் ஓடினாலும் அதனினும் பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. படத்தில் தலைவரின் கண்களுக்கு உள்ள சக்தியை அனைவரையும் உணர வைத்தது.
பாடல்கள் அத்தனையும் அருமையான இளமையான மெட்டுக்கள். 'தோ ஆங்கென் பாராகத்' என்ற சாந்தாராமின் படத்தை தழுவி எடுத்தாலும் தமிழுக்கு ஏற்ற வகையில் மாற்றம் செய்து எடுக்கப்பட்டது. "இதயக்கனி"யின் 72 வது நாளில் வெளியாகிய போதிலும் அதற்கு அடுத்ததொரு வெற்றியை பெற்றாலும் ஒரு சில சென்டர்களில் அபரிமிதமான வசூலை கொடுத்தது எனலாம்.
நெல்லை பூர்ணகலாவில் 101 நாட்கள் ஓடி மாநகரிலேயே மாற்று நடிகரின் எந்த ஒரு படமும் நெருங்க முடியாத வெற்றியை பதிவு செய்தது.நெல்லை பூர்ணகலாவில் 100 நாட்கள் கண்ட ஒரே படம் "பல்லாண்டு வாழ்க" மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 101 நாட்களில் ரூ 260000 ஐ வசூலாக பெற்று அசர வைத்தது.
மதுரையில் 33 நாட்களிலேயே 3 லட்சத்தை தாண்டி சாதனை செய்தது.
சென்னையில் தேவிபாரடைஸ்(104) அகஸ்தியா(104) சரவணாவில்(70) வெளியாகி மொத்தம் 278 நாட்கள் ஓடி ரூ 1453287.36 வசூலாக பெற்றது.1975 ம் ஆண்டில் 3வது 10 லட்சம் தாண்டி வசூலான படமாக சாதனை செய்தது.
தேவிபாரடைஸில் மட்டும் ரூ 793428.80 வசூலானது. அகஸ்தியாவில் 104 நாட்களில்
ரூ 428927.19 வசூலாக பெற்றது.
சரவணாவில் 70 நாட்களில் ரு 230931.37 வசூலானது. தேவி பாரடைஸில் வெளியான அய்யனின் அனைத்து படங்களையும் வென்று முன்னணி பெற்றது குறிப்பிடத்தக்கது. நெல்லையில் 101 நாட்களிலேயே ரூ 260534.80 பெற்று எதிரணியின் அனைத்து படங்களையும் ஓவர்டேக் செய்தது "பல்லாண்டு வாழ்க" படத்தின் தனி சிறப்பு.
நன்றி நடிகப் பேரரசர்






















