• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கையில் நாளை சுனாமி தயார்நிலை ஒத்திகை

இலங்கை

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து இடங்களில் நாளை இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலைப் பயிற்சி நடத்தப்பட உள்ளது.

இந்தப் பயிற்சியை உண்மையான சுனாமி அச்சுறுத்தலாகக் கருதி பீதி அடையவோ அல்லது தவறாகப் புரிந்துகொள்ளவோ ​​வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் பயிற்சி நடவடிக்கை மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கிராம அலுவலர் பிரிவுகளில் மேற்கொள்ளப்படும்.

இந்த பயிற்சி காலை 8:30 மணிக்கு களுத்துறை மாவட்டத்தில் தொடங்கும்.
 

Leave a Reply