• Welcome to TamilsGuide
செய்திகள் 1

டிரம்ப் கான்வேக்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானை நடுரோட்டில் நிறுத்திய அமெரிக்க போலீசார்..

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா. போது சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சபையில் பிரான்ஸ் அதிபர் நீண்ட நேரம் உரையாற்றினார். பின்னர், ஓய்வு எடுப்பதற்காக பிரான்ஸ் தூதரகம் வந்து கொண்டிருந்தார். அப்போது, டொனால்டு டிரம்ப் கான்வே பாஸ் வந்து கொண்டிருந்தது. இதனால் போலீசார் உடனடியாக அனைத்து சாலைகளிலும் போக்குவரத்தை நிறுத்தினர்.

இதனால் மேக்ரான் நடுரோட்டில் நிற்க வேண்டியதாயிற்று. சிறிது நேரம் காரில் அமர்ந்திருந்த மேக்ரான், பின்னர் காரில் இருந்து இறங்கி வந்து நேராக தடுப்பு கம்பி அருகே நின்று கொண்டிருந்து போலீஸ் அதிகாரிடம், ஏன் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது? என கேள்வி எழுப்பினார்.

அதற்கு அதிகாரி "மன்னிக்கவும் மிஸ்டர் பிரசிடென்ட். எல்லாமே தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது" என்றார்.

இதனால் மேக்ரான் சாலையில் நின்று கொண்டே, டொனால்டு டிரம்பிற்கு போன் செய்துள்ளார். டொனால்டு டிரம்ப் போனை எடுத்து எப்படி இக்கிறீர்கள்?. என்ன நிகழ்ந்தது? என்று கேட்டுள்ளார். நான் தெருவில் நின்று கொண்டிருக்கிறேன். ஏனென்றால், எல்லாமே உங்களுக்கான தடைசெய்யப்பட்டுள்ளது என மேக்ரான் பதில் அளித்துள்ளார்.

எனினும், டிரம்ப் கான்வே கடந்த சென்ற பிறகு, சாலைகள் திறந்து விடப்பட்டுள்ளது. சாலை வழியாக நடந்து சென்றவர்கள், பிரான்ஸ் தலைவர் மேக்ரானை அருகில் பாதுகாப்பின்றி நிற்பதை மகிழ்ச்சியாகவும், அதேவேளையில் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்.

மேக்ரான் உடனடியாக காருக்கு செல்லவில்லை. டிரம்பிடம் போனில் பேசியவாறு சாலையில் நடந்து சென்றார். பொதுமக்கள் அவரிடம் ஒரேயொரு செல்பி எனக் கட்டாயப்படுத்தியுள்ளனர். ஒருவர் அவருடைய நெற்றியில் முத்தமிட்டதாக உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
 

Leave a Reply