தங்காலை பகுதியில் இன்று மீட்கப்பட்ட போதைப்பொருட்கள் விபரம்
இலங்கை
தங்காலை பகுதியில் இன்று (22) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
அதற்கமைய, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் 5 கைத் துப்பாக்கிகளும், ஒரு T-56 ரக துப்பாக்கியும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.






















