தங்காலையில் புதுப்பிக்கப்பட்டு வந்த வீடொன்றிலிருந்து சடலங்கள் மீட்பு
இலங்கை
தங்காலை, சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வந்த ஒரு பழைய வீட்டில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
விசாரணையின் போது, வீட்டின் அருகே அமைந்துள்ள ஒரு லொறியில் இருந்து ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பாக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் சுகவீனம் காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரும் இதன்போது உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
அரசு மருத்துவ பரிசோதகர் சம்பவம் குறித்து பிரேத பரிசோதனை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.























