பிரதமருக்கான அன்புப்பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன் - ஜி.வி. பிரகாஷ்
சினிமா
ஜி.வி பிரகாஷ் நடிப்பில் அண்மையில் ப்ளாக்மெயில் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள், கண்ணை நம்பாதே ஆகிய படங்களை இயக்கிய மு. மாறன் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் கதாநாயகியாக தேஜு அஸ்வினி நடித்துள்ளார் மற்றும் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர்கள் பிந்து மாதவி, வேட்டை முத்துக்குமார், ரெடின் கிங்ஸ்லி, ரமேஷ் திலக், ஹரி பிரியா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 75வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு புகழாரம் சூட்டும் வகையில் ஜி.வி.பிரகாஷ்குமார் பிரதமர் மோடிக்கு ஏழை தாயின் மகன் என்ற பாடலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் "இசையமைப்பாளராகவும் , பெருமைமிகு இந்திய தேசத்தின் குடிமகனாகவும் ,
140 கோடி மக்களின் பாதுகாவலர் , எனது பிரதமர் அவர்களின் பிறந்த தினத்திற்கு மக்களின் சார்பாக இந்த அன்பு பரிசை இசை வடிவத்தில் வழங்குவதில் பெருமை அடைகிறேன்.நீண்ட நெடிய ஆயுளோடு மக்கள் பணியாற்றிட இறைவனை வேண்டிக்கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.























