கன்னட நடிகர் அவரது மனைவி போன்களை ஹேக் செய்து பண மோசடியில் ஈடுபட்ட மர்மக் கும்பல்
சினிமா
கன்னட நடிகர் உபேந்திர ராவ் மற்றும் அவரது மனைவியின் போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர் மோசடியின் முயற்சியாக மர்ப நபர்கள் போனை ஹேக் செய்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.
இன்று காலை எனது மனைவி போனுக்கு, ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக தெரியாத நம்பரில் இருந்து போன் வந்துள்ளது. போனை எடுத்த பின்னர்தான், சைபர் மோசடி எனத் தெரிவந்துள்ளது. உடனே போன் ஹேக் செய்யப்பட்டது. அதேபோல் என்னுடைய போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய போனில் இருந்து, பணம் தொடர்பாக போன் செய்தால், பதில் அளித்து பணம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.
என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய போனில் இருந்து சென்ற மெசேஜ் காரணமாக, 2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் கவனமாக இருக்கும்படி கேட்டுள்ளார்.
இது தொடர்பாக உபேந்திர ராவ் கூறுகையில் "காலையில் யாரோ ஓருவர் எனக்கு போன் செய்து, டெலிவரி நபருக்கு அட்ரஸ் கிடைக்கவில்லை. இதனால் தங்களுக்கு வந்த Code-ஐ அனுப்புங்கள், அந்த நபர் (டெலிவரி நபர்) உடனடியாக உங்களை அழைப்பார் என பேசினார்.
எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால், அவசரமாக அவ்வாறு செய்தேன். அவர்கள் என்னுடைய போனை ஹேக் செய்தனர். அதன்பின் என்னுடைய வாட்ஸ்அப்வில் உள்ளவர்களக்கு அவசரம் எனக் கூறி பணம் அனுப்புமாறு மெசேஜ் அனுப்பினார்கள். 2 மணி நேரத்தில் திருப்பி அனுப்புவதாக கூறி 55 ஆயிரம் கேட்டு தகவல் அனுப்பினர்.
இது தொடர்பான நாங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சைபர்கிரைன் துறையின் உயர்அதிகாரியிடம் பேசினோம். அவர்கள் மெசேஜ்-யை ஓபன் செய்ய வேண்டாம். பணம் அனுப்ப வேண்டாம் எனக் கூறினர்" என்றார்.






















