• Welcome to TamilsGuide
செய்திகள் 1

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 631 பேர் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் நேற்று (13) நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் போது குற்றச் செயல்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரிலும், சட்டவிரோத மதுபானம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் தொடர்பாகவும் மொத்தம் 631 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 25,774 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 22 நபர்களை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மேலும் பிடியாணை உத்தரவு நிலுவையில் உள்ள 332 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

அறிக்கையின்படி, மொத்தம் 36 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.

மேலும் 21 பொறுப்பற்ற சாரதிகள் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,673 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

சிறிய, நடுத்தர மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மற்றும் சட்டவிரோத துப்பாக்கிகளை வைத்திருப்பவர்களைக் கைது செய்ய நாடு முழுவதும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
 

Leave a Reply