இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி! -மகிந்த
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜேராம இல்லத்திலிருந்து நேற்று வெளியேறியிருந்தார். அவர் அங்கிருந்து செல்வதற்கு முன்னர்
இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவொன்றை இட்டுள்ளார்.
குறித்த பதிவில் ” விஜேராமவிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து நான் புறப்படுவதற்கு முன்னர், இலங்கைக்கான சீனத் தூதுவரை சந்தித்து கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது வருகைக்கு நான் நன்றி தெரிவிப்பதுடன், எமது நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர மற்றும் தனிப்பட்ட உறவு ரீதியான நீடித்த நட்புறவை நான் அன்புடன் நினைவுகூருகிறேன்’ என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருந்தார்.























