முன்னாள் கடற்படைத் தளபதிக்கு மீண்டும் விளக்கமறியல்
இலங்கை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, பொல்கஹவெல நீதிவான் நீதிமன்றம் அவரை செப்டம்பர் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கடற்படை புலனாய்வு பணியகத்தில் பணியாற்றிய போது, பொத்துஹெரவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போனது தொடர்பாக அவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.























