• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாள நிலைமை குறித்து ரணில் அறிக்கை

இலங்கை

நேபாளத்தின் காத்மாண்டுவில் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

நேபாளத்தில் நடந்த இளைஞர்கள் உட்பட அனைத்து வகையான மக்கள் கொலைகளையும் கண்டிப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை எரிக்கப்பட்டது நேபாள ஜனநாயகத்திற்கு பெரும் அவமரியாதை என்றும் ரணில் விக்கிரமசிங்க தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

நாட்டில் அமைதியை நிலைநாட்டுவதும் அரசியலமைப்புத் தேர்தலை நடத்துவதும் ஆட்சியைப் பிடித்த இராணுவத்தின் பொறுப்பு.

புத்தர் பிறந்த இடமான நேபாளம் ஒரு தனித்துவமான நாடு.

இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது.

எனவே, நேபாளத்தில் தற்போதைய அரசாங்கம் புத்தர் போதித்த ‘ஏழு குற்றமற்ற கொள்கைகளை’ ஒரு முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளும் என்று நம்புவதாகவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply