இலங்கையை வந்தடைந்த இத்தாலி வெளிவிவகார பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி
இலங்கை
இத்தாலியின் வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பிரதி அமைச்சர் மரியா த்ரிபோடி (Maria Tripodi) இன்று (03) இலங்கையை வந்தடைந்தார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவர் இலங்கை – இத்தாலி அரசியல் ஆலோசனைகளின் தொடக்க அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரவுடன் இணை தலைமை தாங்குவார்.
அரசியல் ஆலோசனைப்பொறிமுறையை நிறுவுவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
இது இரு நாடுகளுக்கும் இடையிலான உரையாடலுக்கான கட்டமைக்கப்பட்ட செயற்பாட்டுச் சட்டகத்தை வழங்குகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் 1952 இல் நிறுவப்பட்டன.
பிரதி அமைச்சர் த்ரிபோடி பிரதமர் ஹரிணி அமரசூரியவை சந்திப்பதுடன், வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்






















