நண்பர்களுக்கு ஜனாதிபதி கொடுத்த இன்ப அதிர்ச்சி
இலங்கை
களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களது ஒன்று கூடல் நிகழ்வில் கலந்துகொண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது நண்பர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
நேற்றைய தினம் களனி பல்கலைக்கழகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது ஜனாதிபதியுடன் பல்கலைக்கழகத்தில் கற்ற பலரும் அவருக்கு அமோகமான வரவேற்பினை வழங்கியுள்ளனர்.
அத்துடன் ஜனாதிபதி அநுரவின் சமகால நண்பர்கள் பலரும் ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்து தமது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






















