• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சமன் ஏகநாயக்க சிஐடியில் முன்னிலையாக தேவையில்லை என அறிவிப்பு

இலங்கை

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலயாக வேண்டிய அவசியமில்லை என குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) அவருக்கு அறிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, இன்று (01) காலை 9:00 மணிக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இங்கிலாந்து விஜயம் தொடர்பான விசாரணை தொடர்பாக இந்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக சமன் ஏகநாயக்க முன்பு விசாரிக்கப்பட்டார்.

இதற்கிடையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இங்கிலாந்தின் வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டதாக கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகஸ்ட் 22 அன்று விளக்கமறியலில் வைக்கப்பட்டு ஆகஸ்ட் 26 அன்று அவருக்கு பிணை வழங்கப்பட்டது.
 

Leave a Reply