• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்ட விதிமுறைகள் வர்த்தமானியில்

இலங்கை

இலங்கை மின்சார திருத்தச் சட்டத்தின் தன்னார்வ ஓய்வூதியத் திட்டத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன.

எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட இந்த வர்த்தமானி அறிவிப்பில், தன்னார்வ ஓய்வு பெற உரிமையுள்ள மின்சார சபையின் ஊழியர்களுக்குப் பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

2024 ஆம் ஆண்டின் 36 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் பிரிவு 18 இன் மூன்றாவது உப பிரிவின்படி இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை மின்சார சபையின் தன்னார்வ ஓய்வு பெறும் திட்டத்தின் கீழ், நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீடு இந்த வர்த்தமானி அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, முதல் 10 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் இரண்டு மாத சம்பளமும், மீதமுள்ள ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் ஒன்றரை மாத சம்பளமும் இழப்பீடாக வழங்கப்படும்.

10 ஆண்டுகளுக்கும் குறைவான சேவைக் காலம் கொண்ட ஊழியருக்கு, ஒவ்வொரு 12 மாத சேவைக்கும் 5 மாத சம்பளம் வழங்கப்படும், மீதமுள்ள சேவைக் காலத்திற்கு இழப்பீடு இல்லை.

மேலும், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான விதிமுறைகள் உள்ளிட்ட பல நிபந்தனைகள் வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளன.
 

Leave a Reply