சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்
இலங்கை
‘மலையகத்தின் தந்தை’ என போற்றப்படும் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமானின் 112 ஆவது ஜனன தினம் இன்றாகும்.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
1913 ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திததி பிறந்த அமரர். சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களின் 112 ஆவது பிறந்த தினம் இன்று (30) அனுஷ்டிக்கப்படுகின்றது.
சுதந்திர இலங்கையில் உருவான முதலாவது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக அங்கம் வகித்தவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான்.
இலங்கை, இந்திய காங்கிரஸ் உருவாக்கத்துக்கு முக்கிய பங்களிப்பு வழங்கிய அவர் அதன் தலைவராகவும் செயற்பட்டுள்ளார்.
இலங்கை, இந்திய காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸாக பெயர் மாற்றம் பெற்றது முதல் அதன் தலைவராக செயற்பட்டார்.
முக்கிய பல அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.
இலங்கையில் சிறந்ததொரு தேசிய தலைவராகவும் செயற்பட்டார் என்றும் தெரிவித்துள்ளது.






















