50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது
இலங்கை
சுமார் 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உட்பட நால்வரைக் கொழும்பு குற்றவியல் பிரிவு கைதுசெய்துள்ளது.
குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 4 கிலோ 302 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
முன்னதாக, மாளிகாவத்தை பகுதியில் 206 கிராம் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்
அங்கொட பகுதியில் அமைந்துள்ள அவரின் வீட்டிலிருந்து நான்கு பொதிகளில் இருந்து 3 கிலோ 784 கிராம் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, மேலதிக விசாரணைகளின் போது கொழும்பு 14ல் உள்ள வீடொன்றில் இருந்து 106 கிராம் ஹெரோயினுடன் இன்னுமொரு நபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் விசாரணைகளின் போது வாழைத்தோட்டம் பகுதியில் வைத்து 206 கிராம் ஹெரோயினுடன் அடுத்த சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இந்த குற்றச்செயல்களுக்கு உதவியாக இருந்த சந்தேகநபர் ஒருவரையும் மாளிகாவத்தை பகுதியில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதாகிய சந்தேகநபர்கள் நால்வரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.























