வடகொரியாவின் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் சோதனை வெற்றி
வடகொரியா அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளின் எச்சரிக்கையை மீறி இந்த சோதனைகளை நடத்துகிறது.
இந்த நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் முன்னிலையில் 2 புதிய வான் பாதுகாப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆயுதங்களுக்கு சிறந்த போர் திறனும், தனித்துவமான தொழில்நுட்பமும் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த இரு வகையான ஆயுதங்களின் தொழில்நுட்ப அம்சங்கள், டிரோன்கள் மற்றும் கப்பல் ஏவுகணைகள் உள்ளிட்ட வெவ்வேறு வான் இலக்குகளை அழிப்பதற்கு மிகவும் உகந்தவை என்றும் தெரிவித்துள்ளது.























