• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நான்காவது நாளாகவும் தொடரும் தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு

இலங்கை

பல கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுத்து வரும் தபால் தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று நான்காவது
நாளாகவும் (20) தொடர்கின்றது.

அமைச்சருடன் முறையான கலந்துரையாடலை கோரி இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜி.ஜி.சி. நிரோஷன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வரவு நேர பதிவுக்காக கைரேகை இயந்திரம் நிராகரிக்கப்பட்டதாக வௌியான குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் கருத்து வௌியிட்ட பிரதி தபால்மா அதிபர் சமீஷா டி சில்வா, கைரேகை இயந்திரத்தை செயல்படுத்துவதே தொழிற்சங்கத்தினரின் பணிப்புறக்கணிப்புக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply