• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முடிவுகளுக்கு உடன்பட்டால் மாத்திரம் தபால் தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை – அமைச்சர் நலிந்த

இலங்கை

கைரேகை வருகை மற்றும் மேலதிக நேர ஊதியம் தொடர்பான அரசாங்க முடிவுகளுக்கு தபால் தொழிற்சங்கங்கள் உடன்பட்டால் மட்டுமே அவர்களுடன் சந்திப்பு நடத்தத் தயாராக இருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (19) தெரிவித்தார்.

குறுகிய கால வேலைநிறுத்தங்கள் கூட தபால் துறைக்கு நிதி இழப்பை ஏற்படுத்தும்.

நீடித்த வேலைநிறுத்தங்கள் திறைசேரியை சீர்குலைத்து எதிர்கால சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

தபால் தொழிற்சங்கங்கள் முன்வைத்த 19 கோரிக்கைகளில் 17 கோரிக்கைகளை அரசாங்கம் தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலதிக நேரக் கொடுப்பனவுகளில் மாற்றங்கள் மற்றும் கைரேகை முறையை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 19 கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை (17) மாலை முதல் நாடளாவிய வேலைநிறுத்தத்தைத் தொடங்கினர்.

இந்த வேலைநிறுத்தம் நாடு தழுவிய முக்கிய சேவைகளை சீர்குலைத்துள்ளது.
 

Leave a Reply