5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் இருவர் கைது
இலங்கை
5 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கில் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய நேற்று (15) மாலை வத்தளை பொலிஸ் பிரிவின் பங்களாவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேகேபர்களிடம் இருந்து சுமார் 309 கிலோகிராம் நிறையுடைய கேரள கஞ்சாவை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 49 வயதுடைய இரண்டு சந்தேகபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களால் வாடகைக்கு பெறப்பட்டிருந்த வீட்டின் அறை ஒன்றிலேயே கேரள கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் வெலிசறை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (16) ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன்
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.























