நமது சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் - கே.எஸ் ரவிக்குமார்
சினிமா
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான கே.எஸ். ரவிக்குமார்,
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்துள்ள சிறப்பான தருணத்தை நினைவுகூர்ந்து அவர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய, முத்து மற்றும் படையப்பா படத்தில் இருந்து சில புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தனது X பக்கத்தில், அவர் "எங்கள் சினிமாவின் நித்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார்,
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு என் இதயப்பூர்வமான வாழ்த்துக்கள். இன்று கூலி திரைப்படம் வெளியாகியுள்ளது, இது வெறும் திரைப்படமல்ல, இது உங்கள் சாம்ராஜ்யத்தின் கொண்டாட்டம்" என்று பதிவிட்டார்.
அத்துடன், 'படையப்பா' மற்றும் 'முத்து' படங்களில் படப்பிடிப்பு நேரத்தில் எடுக்கப்பட்ட சில அரிய புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
அவற்றில், ரஜினிகாந்த், கே.எஸ். ரவிக்குமார், மற்றும் புகழ்பெற்ற இயக்குனர் கே. பாலச்சந்தர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ரஜினிகாந்த் – கே.எஸ். ரவிக்குமார் கூட்டணி தமிழ் சினிமாவில் அளித்த வெற்றிகள் ரசிகர்களிடையே இன்னமும் மறக்க முடியாதவையாகும்.























