பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்
இலங்கை
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிக்க ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று (12) கூடிய அரசியலமைப்பு பேரவையின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டது.
























