ஆகஸ்ட் முதல் 10 நாட்களில் 77,482 சுற்றுலா பயணிகள் வருகை
இலங்கை
2025 ஆகஸ்ட் மாதத்தின் முதல் 10 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 77,482 ஆக பதிவாகியுள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் (SLTDA) வெளியிட்டுள்ள தரவுகளின்படி,
இந்தியாவில் இருந்து மொத்தம் 13,511 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.
இது 17.4% ஆகும்.
மேலும், ஆகஸ்ட் மாதத்தில் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8,691 பேரும், இத்தாலியிலிருந்து 6,036 பேரும், சீனாவிலிருந்து 5,659 பேரும், பிரான்சிலிருந்து 5,518 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இதற்கிடையில், ஆகஸ்ட் மாதத்திற்கான அண்மையபுள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டதன் மூலம், 2025 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,445,770 ஆக அதிகரித்துள்ளது.
அவர்களில், 292,633 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள், 140,068 பேர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் 116,895 பேர் ரஷ்யாவைச் சேர்ந்தவர்கள் என்று SLTDA குறிப்பிட்டுள்ளது.
ஜூலை மாதத்தில் மொத்தம் 200,244 வெளிநாட்டினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது ஜூலை 2024 தரவுகளுடன் ஒப்பிடும்போது 6.6% அதிகரிப்பாகும்.























