• Welcome to TamilsGuide
செய்திகள் 1

காசாவை கைப்பற்றும் திட்டம் குறித்து இஸ்ரேல் பிரதமர் விளக்கம்

காசாவை முழுமையாக ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கு நேற்று இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

காசாவில் ஏற்கனவே 75 சதவீத பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் இஸ்ரேல் வைத்துள்ள நிலையில் மீதமுள்ள பகுதிகளையும் கைப்பற்ற பிரதமர் நேதன்யாகு உத்தரவிட்டார்.

இந்த முடிவை உள்நாடு மற்றும் பல்வேறு நாடுகளின் தலைவர்கள் விமர்சித்துள்ளனர். மேலும் இஸ்ரேல் மக்களே இது பணய கைதிகளை ஆபத்தில் தள்ளும் செயல் என நேதன்யாகு முடிவை எதிர்த்து வருகின்றனர்.

இந்த சூழலில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தனது திட்டம் குறித்து விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

நேதன்யாகு தனது எக்ஸ் தள பதிவில் "நாங்கள் காசாவை ஆக்கிரமிக்கவில்லை. காசாவை ஹமாஸிடமிருந்து விடுவிப்போம். காசாவில் இராணுவ நடவடிக்கைகளைத் தடுப்போம். அமைதியான நிர்வாகத்தை நிறுவுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

பாலஸ்தீன அதிகாரசபை, ஹமாஸ் அல்லது வேறு எந்த பயங்கரவாத அமைப்பும் அந்தப் பகுதியில் இருக்காது.

காசாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட நமது மக்களை விடுவிப்பதற்கு இந்த நடவடிக்கை பயனுள்ளதாக இருக்கும்.

இது எதிர்காலத்தில் காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஏற்படும் எந்த அச்சுறுத்தலையும் நீக்கும்" என்று தெரிவித்துள்ளார். 
 

Leave a Reply