கானாவில் ஹெலிகாப்டர் விபத்தில் மந்திரிகள் உள்பட 8 பேர் பலி
கனடா
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் கானாவும் ஒன்று. தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்கச்சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது.
அதில் பாதுகாப்புத்துறை மந்திரி எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் மந்திரி அல்ஹாஜி முர்தாலா முகமது உள்பட 8 பேர் பயணம் செய்தனர்.
இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து,கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்து விபத்து பகுதிக்குச் சென்ற ராணுவத்தினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் அந்த நாட்டின் மந்திரிகள் உள்பட 8 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட கானா அரசு, தேசிய துக்க தினமாகவும் அறிவித்தது.























