நண்பர்களாக பேசுங்கள் - இந்தியா, அமெரிக்க ஒற்றுமையை வலியுறுத்தும் பாடகி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தங்கள் நாட்டுடன் உலக நாடுகள் வரி விதிப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.
குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அமெரிக்கா-இந்தியா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவில்லை. இதனால் 25 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது எனவும் எச்சரித்தது. ஆனால், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தவில்லை.
இதற்கிடையே, அடுத்த 24 மணி நேரத்தில் இந்திய பொருள்களுக்கு கணிசமாக வரி விதிக்கப்படும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவு, அமெரிக்காவும் நண்பர்களாக பேசுங்கள் என அமெரிக்க பாடகி மேரி மில்பென் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, மில்பென் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் உள்ள பல சிறு வணிகங்களும் கட்டண இழுபறியில் பாதிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் உண்மையான நண்பர்களாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
நான் மீண்டும் சொல்கிறேன். அமெரிக்காவிற்கு இந்தியா தேவை, இந்தியாவிற்கு அமெரிக்கா தேவை. நமது மூலோபாய கூட்டணியை சீர்குலைக்கும் எந்தவொரு கொள்கை திசையும் தவறான திசையாகும். தடிமனான வார்த்தைப் பரிமாற்றம் நம் அனைவரையும் தொந்தரவு செய்கிறது என பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே மேரி மில்பென், இந்தியா- அமெரிக்கா உறவுக்கு மிகச்சிறந்த தலைவர் பிரதமர் மோடி என புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.























