• Welcome to TamilsGuide
செய்திகள் 1

செங்கடலில் படகு கவிழ்ந்து விபத்து - 76 அகதிகள் உயிரிழப்பு

ஏமனில் செங்கடலில் படகு கவிழ்ந்ததில் 76 அகதிகள் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை, ஏமனின் அப்யான் மாகாணம் அருகே 157 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.

இதன் விளைவாக, 157 பேர் தண்ணீரில் விழுந்தனர். இவர்கள் பெரும்பாலானோர் கிழக்கு ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவை சேர்த்தவர்கள் ஆவர்.

கான்பார் மாவட்டத்தில் கடற்கரையில் 54 உடல்கள் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் சில உடல்கள் வேறொரு பகுதியில் கண்டெடுக்கப்பட்டன. இதுவரை 32 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

உலகம் முழுவதும், அதிக சுமை காரணமாக அகதிகள் பயணிக்கும் படகுகள் தொடர்ந்து விபத்துக்குள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கடந்த சில மாதங்களில் மட்டும், நூற்றுக்கணக்கான அகதிகள் படகு கவிழ்ந்த சம்பவங்களில் இறந்துள்ளனர். 
 

Leave a Reply